2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழில் இளைஞர் கடத்தப்பட்டார்

Kanagaraj   / 2013 ஜூன் 17 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா,நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வெள்ளை வானில் வந்தோரினால் இன்று திங்கட்கிழமை மாலை கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் சங்குவேலி பிள்ளையார் கோவிலடியில் வைத்தே குறித்த இளைஞன் இன்று மாலை 5.10 மணியளவில் கடத்தப்பட்டுள்ளார்.

ஆணைக்கோட்டை சோமசுந்தரம் வீதியைச்சேர்ந்த கந்தையா ஜெயசுதன்( வயது 28) என்ற இளைஞன் கடத்தப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .