2025 ஜூன் 19, வியாழக்கிழமை

தபால் அதிபரின் கைப்பை அபகரிப்பு

Kanagaraj   / 2013 ஜூன் 17 , பி.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

மானிப்பாய் தபால் அதிபர் தபால் கந்தோரை பூட்டிவிட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் இருவர் தபாலதிபரின் சைக்கிள் கூடையில் இருந்த கைப்பையை பறித்தெடுத்துக் கொண்டு சென்றுள்ளார்கள்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் தாவடி மானிப்பாய் வீதியில் உள்ள தேவாலயத்திறக்க அருகாமையில் இடம் பெற்றது.

மானிப்பாய் தபாலகத்தின் தபாலதிபர் தனது கைப்பையில் தபாலகத்தின் திறப்புக்கோர்வைகள் மற்றும் பாதுகாப்புப் பெட்டகத்தின் திறப்புகள் கையடக்கத் தொலைபேசி தனது சொந்தப் பணம் ஐயாயிரம் ரூபா என்பவற்றை கைப்பையில் வைத்து சைக்கிள் கூடையில் வைத்த வண்ணம் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில்,மோட்டார் சைக்கிளில்  வந்த இளைஞர்கள் இருவர் தபாலதிபரின் சைக்கிள் கூடையில் இருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளார்கள்.

இது சம்பந்தமாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து,  மானிப்பாய் தபாலகத்திற்க்கு இன்று திங்கள் கிழமை இரவு மானிப்பாய் பொலிசார் காவல் கடமைக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .