2025 ஜூன் 19, வியாழக்கிழமை

புதிய மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டம்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 18 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணியின்போது அழிக்கப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகளை நாட்டுவதற்கு வன விரிவாக்கல் திட்டத்தின் கீழ் வனவளத்திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பாடசாலைகள், வீதிகள், பொது இடங்களில் புதிய மரக்கன்றுகளை நாட்டுவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட வனவளத் திணைக்கள அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்காக யாழ். மாவட்ட வனவளத் திணைக்கள அலுவலகத்தில் தேக்கு, மலைவேம்பு, மருது, இலுப்பை, பலா, மஹோக்கணி ஆகிய மரக்கன்றுகள்  உற்பத்தி செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.  தேவையானவர்கள் தம்மோடு தொடர்பு கொண்டு  தேவையான மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .