2025 ஜூன் 19, வியாழக்கிழமை

முஸ்லிம் மக்களின் பிரச்சினை குறித்து முதல்வர் ஆராய்வு

A.P.Mathan   / 2013 ஜூன் 18 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா
 
யாழ். மாநகரசபை பிரிவுக்குட்பட்ட முஸ்லிம் பகுதிகளுக்கு மாநகர முதல்வர் யோகேஸ்வரி நேற்று திங்கட்கிழமை திடீர் விஜயம் மேற்கொண்டு அங்கு நிலவும் பிரச்சினைகள் குறித்து மக்களுடன் கலந்துரையாடினார்.
 
யாழ். முஸ்லிம் பகுதியில் காதி அபூபக்கர் வீதியில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகின்றது. இந்நிலைமையினை சமூக சேவகர் ஜெ.டி.எம் நியாஸ் மற்றும் மாநகரசபை உறுப்பினர் எம்.எம்.எஸ் முஸ்தபா ஆகியோர் முதல்வருக்கு அறிவித்ததை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
 
இதன்போது முதல்வரால் மக்களின் பல பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடன் தொடர்பு கொண்ட முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க பணிப்புரை  விடுத்தார்.
 
மேலும், இப்பிரதேசத்தில் பல்வேறு சமூக நலத்திட்டங்களை மேற்கொண்டு வரும் யாழ். முஸ்லிம் உதவும் கரங்கள் பிரதிநிதிகளையும் முதல்வர் சந்தித்து மக்கள் பிரச்சினைகளை உடனடியாக அறியத்தருமாறு கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .