2025 ஜூன் 19, வியாழக்கிழமை

இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Menaka Mookandi   / 2013 ஜூன் 19 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

இந்திய மீனவர்கள் 25பேரையும் நாளை  வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 6ஆம் திகதி புதன்கிழமை இரவு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஊர்காவற்துறை நீதிமன்றில் இ;ந்திய மீனவர்கள் 25பேரையும் ஆஜர்ப்படுத்திய வேளையில், ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.மகேந்திரராஜர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், அன்றைய தினமே யாழ்.மேல் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

உத்தரவின் பிரகாரம் 25 இந்திய மீனவர்களையும் இன்று யாழ். மேல் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர். ஆஜர்ப்படுத்திய வேளை, அரசசட்டத்தரணி மன்றிற்கு சமூகமளிக்காத காரணத்தினால், 25 மீனவர்களையும் நாளை (20.06.2013) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், நாளை மீண்டும் யாழ். மேல் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறும் யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் உத்தரவிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .