2025 ஜூன் 19, வியாழக்கிழமை

வாகனங்களுக்கு புகை பரிசோதனைச் சான்றிதழ் அவசியம்

Suganthini Ratnam   / 2013 ஜூன் 21 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


வடமாகாணத்திலுள்ள வாகனங்களுக்கு வரி செலுத்துவதற்கு புகை பரிசோதனைச் சான்றிதழ் சமர்ப்பித்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் பி.ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

கடந்த முதலாம்; திகதியிலிருந்து வடமாகாணத்தில் வாகனங்களுக்கு புகை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறியுள்ள அவர், வாகனங்களுக்கு புகை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டால் மாத்திரமே வாகனங்களுக்கான வரியைச் செலுத்த முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.

இப்பரிசோதனையின் மூலம் வாகனங்களிலுள்ள குறைபாடுகள் உடனடியாக கண்டறியக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகக் கூறிய அவர்,  இவ்வாறு வாகனத்திலுள்ள குறைபாடுகள் உடனடியாக கண்டறியப்படின் அதுவும் ஒருவகையில் பொதுமக்களுக்கு நன்மை தரக்கூடியதாகவுள்ளதெனவும் தெரிவித்துள்ளார். மேலும், சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பை தருமெனவும் அவர் கூறினார்.

வாகனங்களுக்கு  புகை பரிசோதனை மேற்கொள்ளுவதற்காக 2 நிறுவனங்கள் வடக்கில் செயற்பட்டு வருவதாகவும் வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் பி.ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .