2025 ஜூன் 19, வியாழக்கிழமை

துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 ஜூன் 22 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தவர்களின் நன்மை கருதி வடமாகாண ஆளுனரின் பணிப்பிற்கிணங்க நெடுந்தீவு பிரதேசத்திற்கு 100 துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. 

இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள துவிச்சக்கர வண்டிகளில் முதல்தரமாக 5 துவிச்சக்கர வண்டிகள் நேற்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
இதன்போது பாடசாலை மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினருக்கு இத்துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

துவிச்சக்கர வண்டிகளை அமைச்சர் டக்ளஸ் தேவனந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின், யாழ்.அரச அதிபர் சுந்தரம்
அருமைநாயகம் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

இதன்போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கட்சி நிதியில் இருந்து 3 லட்சம் பெறுமதியான நூல்களும் நெடுந்தீவு பிரதேச சபைக்கென அமைச்சரினால் பிரதேசசபை செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .