2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழில் வெடிபொருட்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஜூன் 24 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். நாவாந்துறை பகுதியிலுள்ள காணியிலிருந்து வெடிபொருட்கள் சில நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளன.

யாழ். முஸ்லிம் வட்டாரம் ஆஸாத் வீதியிலுள்ள காணியிலிருந்து இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

காணி உரிமையாளரான பொலிஸ் உத்தியோகத்தர் அதில் கைவிடப்பட்டிருந்த பாழடைந்த கிணற்றினை சுத்தம் செய்துள்ளார். அதன்போதே
உரப்பையில் இடப்பட்டநிலையில் ந்ஷல் ரக வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர் உடனடியாக அண்மையிலுள்ள இராணுவ முகாமிற்கு அறிவித்ததை அடுத்து, இராணுவத்தினரால் அந்த வெடிபொருட்கள் இராணுவ பொறியியல் பிரிவிடம் கையளிக்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .