2025 ஜூன் 19, வியாழக்கிழமை

ஈ.பி.டி.பி காரைநகர் அலுவலகம் மீது கல்வீச்சு

Super User   / 2013 ஜூன் 25 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் காரைநகர் அலுவலகம் மீது நேற்று திங்கட்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் இடமபெற்றுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் காரைநகர் அலுவலக உறுப்பினர் கண்ணன் தொலைபேசி ஊடாக முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .