2025 ஜூன் 19, வியாழக்கிழமை

கோபுர திருத்தப் பணியில் ஈடுபட்ட மூவர் விழுந்து படுகாயம்

Menaka Mookandi   / 2013 ஜூன் 25 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மாதகல், நுணாச முருகன் ஆலய கோபுர திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த  மூவர் விழுந்து படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் நடைபெற்ற இவ்விபத்து சம்பவத்தில் வடலியடைப்பு பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த பொன்னையா சற்குணம் (வயது 54) என்பவர் படுகாயமடைந்த நிலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவிலும், பசுபதி சத்தியகுமார் (43) என்பவர் அவசர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, சுமார் 30 அடி உயரமுடைய முருகன் ஆலய கோபுர திருத்தப் பணியினை மேற்கொண்டிருந்தவேளை, சாரம் போடப்பட்டிருந்த மரம் முறிந்ததில் ஒரே வரிசையில் நின்ற மூன்று பேர் விழுந்ததில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .