2025 ஜூன் 19, வியாழக்கிழமை

முத்திரையிடப்படாத நிறுத்தல் அளவுக் கருவிகள் பறிமுதல்

Menaka Mookandi   / 2013 ஜூன் 27 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், நா.நவரத்தினராசா

சுன்னாகம் சந்தைப் பகுதியில் முத்திரையிடாத நிலையில் பயன்படுத்தப்பட்ட நிறுத்தல் அளவுக் கருவிகள் வலிகாம் தெற்கு பிரதேச சபையினால் இன்று வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபைத்தலைவர் பிரகாஸ் தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் உழவர் சந்தை, மீன்சந்தை, நகர்ப்பகுதி வர்த்தக நிலையங்களில் வலிகாமம் தெற்கு பிரதேசசபையினரும் மாவட்டச் செயலகத்திலிருந்து வருகைதந்த நிறுத்தல் அளவை கருவிகளுக்கு முத்திரையிடும் பிரிவு உத்தியோகத்தர்களும் இணைந்து மேற்கொண்ட தீடீர் சோதனையின் நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது 14இற்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் தவறானது அல்லது முத்திரையிடப்படாத நிறுத்தற்கருவிகள் பயன்படுத்தப்பட்டமை கண்டறியப்பட்டது.

கருவிகளுக்கு முத்திரையிடும் பணிகள் ஒழுங்குமுறைப்படி வர்த்தகர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டு வழமையாக நடைபெறுகின்றன. இதில் முத்திரையிடப்படாத நிறுத்தற் கருவிகளை முத்திரையிட்டவற்றுடன் இணைத்து பயன்படுத்தியமையும் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளையும் சபையின் மாதாந்தக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்மானிக்கப்பட்டதற்கும் இனங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபைத் தலைவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .