2025 ஜூன் 19, வியாழக்கிழமை

'டேலையிற்' இல்லாத சைக்கிள்களுக்கு சிவப்பு நிற ஸ்ரிக்கர்

Kanagaraj   / 2013 ஜூன் 27 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


'டேலையிற்' இல்லாது செல்லும் சைக்கிள்களுக்கு சுன்னாகம்,  போக்குவரத்து பொலிஸார் சிவப்பு நிறத்திலான ஸ்ரிக்கர்களை இன்று வியாழக்கிழமை ஒட்டினர்.

சுன்னாகம் சந்திப் பகுதியில் வைத்து சைக்கிள்களை மறித்து சோதனைக்கு உட்படுத்திய போக்குவரத்துப் பொலிஸார் 'டேலையிற்' இல்லாத சைக்கிள்களின் பின்புறத்தில் சிவப்பு நிறத்திலான ஸ்ரிக்கர்களை ஒட்டினர்.

சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துஷ்மந்தாவின் பணிப்புரைக்கு அமைவாக சுன்னாகம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரி சிவரா கருணரத்தின தலைமையிலான போக்குவரத்துப் பொலிஸார் இந் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பாடசாலை மாணவர்கள், பெண்கள் மற்றும் வயோதிபர்களென  அனைவரினதும் சையிக்கிள்களும் சோதனையிடப்பட்டு ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .