2025 ஜூன் 19, வியாழக்கிழமை

சுகாதார குழு கையளித்த அறிக்கை தவறானது: விந்தன்

Kanagaraj   / 2013 ஜூன் 27 , பி.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். சொரூபன்

யாழ். மாநகர சபையில் சுகாதார குழு தமக்கு அளித்துள்ள அறிக்கையில் எந்தவித அர்த்தமும் இல்லை. அது தவறான அறிக்கையாகும் என சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் இன்று தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையின் மாதாந்த கூட்டம் முதல்வரின் மாநாட்டு மண்டபத்தில் இன்று மாலை 2.30 நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், யாழ். மாநகர சபையின் சுகாதார குழுவில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும, குழு உறுப்பினர்கள் பதவி விலகவுள்ளதாகவும், இனி பொதுச் சுகாதார குழு கூட்டம் இல்லை எனவும் குறிப்பிடப்பட்ட அறிக்கை எமக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதில் எந்தவித அர்த்தமும் இல்லை. அந்த அறிக்கை தவறானதாகும் என்றார்.

மேலும், சுகாதார பிரிவில் மாற்றம் செய்யப்பட்டு, மீள சரிவர இயங்க வேண்டும், சுகாதார பிரிவில் மேலதிக ஆளணி உள்ளது. அத்துடன், நியமனம் வழங்கப்பட்டதில் முறைகேடு இருக்கின்றது. இதனை நிவர்த்தி செய்தால், சுகாதார குழு சரிவர இயங்கும் என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .