2025 ஜூன் 19, வியாழக்கிழமை

மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 ஜூன் 29 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்


வடமாகாண சிறுவர் நன்நடத்தை பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் யுனிசெப் நிறுவனத்தின் நிதியுதவியுடன் சிறுவர் இல்லங்களில் இருந்து பெற்றோரிடம் இணைக்கப்பட்ட மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

வடமாகாண சிறுவர் நன்நடத்தை பாதுகாப்பு திணைக்களத்தின் ஆணையாளர் எஸ். விஸ்வரூபன் தலைமையில் ஆளுனர் செயலகத்தில் நடைபெற்றது. 

முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த யுத்தத்தினாலும் குடும்ப வறுமையினாலும் சிறுவர் இல்லங்களில் வாழ்ந்து  பின் பெற்றோhரிடம் இணைத்துக்கொள்ளப்பட்ட 150 மாணவர்களுக்கு இந்த துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி, வடமாகாண பிரதசெயலாளர் விஜயலட்சுமி ரமேஸ், ஆளுனரின் செயலாளர் இ.இளங்கோவன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், யாழ்.மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .