2025 ஜூன் 19, வியாழக்கிழமை

நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை

Suganthini Ratnam   / 2013 ஜூலை 03 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் பெண் நாய்;களுக்கு கருத்தடை செய்யும் நடவடிக்கைகள்  நேற்று செவ்வாய்க்கிழமையிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணி;மனையின் கண்காணிப்பின் கீழ், பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யும் நடவடிக்கைகள் உடுவிலுள்ள கிராமங்களில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ளன.

சண்டிலிப்பாய் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி  பிரிவிலும் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் இதுவரையில் 1,000 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக கருத்தடை சிகிச்சையை செய்யும் வைத்திய அதிகாரி தெரிவித்தார். 

கட்டாக்காலி நாய்களை கொல்வது தடை செய்யப்பட்ட நிலையில், யாழ். குடாநாட்டில் பரவலாக கட்டாக்காலி நாய்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இந்தக்; கட்டாக்காலி நாய்களினால் பொதுமக்கள் கடியுண்ட சம்பவங்களும் அதிகரித்துள்ளன.  இந்த நிலையிலேயே பெண் நாய்களுக்கு கருத்தடை செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .