2025 ஜூன் 19, வியாழக்கிழமை

மூக்கினுள் நட்டை திணித்த சிறுமி

Kogilavani   / 2013 ஜூலை 04 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

மூக்கு துவாரத்திற்குள் ஆணி நட்டை திணித்த சிறுமி மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.வட்டுக் கோட்டைப் பகுதியைச் சேர்ந்த ராகுலன் டினுசா என்ற 4 வயது சிறுமியே ஆணி நட்டினை மூக்கு துவாரத்திற்குள் திணித்து மூச்சு திணறலுக்குள்ளாகியுள்ளார்.

இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. சிறுமி விளையாடிக் கொண்டிருந்த நிலையில் நாட்டை மூக்கு துவாரத்தினுள் செலுத்தியுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மூச்சுத்திணறளுக்கு உள்ளாகியதை கண்ட பெற்றோர் சிறுமியை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்தததாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .