2025 ஜூன் 19, வியாழக்கிழமை

மாவையை நிறுத்தாவிடின் தீக்குளிப்பேன்: சிறிகரன்

Kogilavani   / 2013 ஜூலை 05 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமித்தி தங்கராசா

'இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யாவிடின் தீக்குளிக்க தயங்கமாட்டேன்' என யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சிறிகரன் நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'நீண்டகால அரசியல் அனுபவமும், ஆயுதம் தூக்காத மாறாத கொள்கையுடன் அகிம்சை பேராட்டத்தை நடத்திய அனுபவமும் தூரநோக்குச் சிந்தனை, செயல்திறன், பேச்சாற்றல், கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராஜாவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில்  வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த வேண்டும்.

அவ்வாறு நிறுத்தாதவிடின் நான் தீக்குளிக்கவும் தயங்கமாட்டேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.



You May Also Like

  Comments - 0

  • raaj Friday, 05 July 2013 09:01 AM

    தொடங்கிட்டாங்கய்யா....!!!!

    Reply : 0       0

    Pathmadeva Friday, 05 July 2013 04:14 PM

    பைத்தியகாரத்தனம்....!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .