2025 ஜூன் 19, வியாழக்கிழமை

புதிய ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதே எனது நோக்கம்: சரத் பொன்சேகா

Kogilavani   / 2013 ஜூலை 06 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

'நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டிய தேவை உள்ளது. புதிய அரசியல் கட்சியினை உருவாக்கியுள்ள இவ்வேளையில், மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதே எமது நோக்கம்' என முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா இன்று தெரிவித்தார்.

யாழ். ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'காலம் காலமாக அரசியல்வாதிகள் தமது நோக்கத்தினை நிறைவேற்றிக் கொள்வதற்கான குறிக்கோளில் இருக்கின்றார்களே தவிர மக்களின் தேவைகளை நிறைவேற்றி கொள்வதில் பங்களிப்பு செய்யவில்லை.

இன்றைய அரசியல்வாதிகளில் 95 வீதமானவர்கள் ஊழல் நிறைந்த அரசியல் தலைவர்களாகவே உள்ளனர்.

புதிய அரசியல் கட்சியினை உருவாக்கியுள்ள இவ்வேளையில், மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதே எமது நோக்கமாகும்.

மக்களின் தேவைகளை அரசாங்கம்  வெளி  உலகிற்கு சரிவர தெரியப்படுத்தவில்லை. இதனை மக்களுக்கும் வெளியுலகிற்கும் தெரியப்பபடுத்துவதே எனது நோக்கம். 

இலங்கையில் தற்போது பொருளாதாரம் சரிவடைந்து செல்கின்ற இந்நிலையினை மாற்றி மக்களுக்கு சேவை மனப்பாங்குடனும் அர்ப்பணிப்புடனும் சேவை செய்ய வேண்டும்.

தெற்கில் மாகாணசபை இயங்குகின்றபோது, வடக்கில் மட்டும் மாகாண சபை இயக்குவதையும், மக்களின் உரிமைகளை கொடுப்பது பற்றியும் யோசிக்க வேண்டிய தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற பேதமின்றி சுயபாதுகாப்பு, அமைதி, சுய உரிமை ஒரே நாடு, ஒரே தேசம் என்ற நோக்கத்தினையுடைய புதிய அடிப்படையிலான அரசியலமைப்பினை உருவாக்குவதே எனது நோக்கம் என்றும் அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .