2025 ஜூன் 19, வியாழக்கிழமை

வடமாகாண தேர்தல்; யாழில் சு.க.வின் முதலாவது பிரசார கூட்டம்

Menaka Mookandi   / 2013 ஜூலை 05 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலுக்கான அனைத்து வேலைகளும் மும்முரமாக இடம்பெற்று வருகின்ற நிலையில், ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தனது முதலாவது பிரசார கூட்டத்தை இன்று யாழ்ப்பாணத்தில் நடத்தியது.

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதி, மல்லாகம் பிரதேசத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முக்கணியின் கட்சி அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்ட நிலையில் இந்த பிரசார கூட்டம் நடத்தப்பட்டது.
 
இந்த அலுவலக திறப்பு விழாவில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள தயா மாஸ்டர், சட்டத்தரணி றெமிடியஸ் உட்பட யாழ். மாவட்ட வேட்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர்.

அத்துடன், யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

இந்த கூட்டத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்த நிலையில், அவர்கள் அனைவரும் புத்தூர், சிறுபிட்டி, ஐந்துசந்தி பகுதிகளிலிருந்து பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .