2025 ஜூன் 19, வியாழக்கிழமை

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகத்திற்கு சீல்வைப்பு

Kogilavani   / 2013 ஜூலை 06 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

முழங்காவில் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றுக்கு நீதிமன்றத்தின் பணிப்புரைக்கு அமைவாக சீல்வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட சுகாதார பரிசோதகர்கள் இந்நடவடிக்கையை நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொண்டார்.

ஏற்கனவே மேற்படி உணவகத்தின் சுகாதார சீர்கேட்டை கண்டறிந்த சுகாதாரத் திணைக்களத்தினர், குறிப்பிட்ட உணவகத்தின் சுகாதார சீர்கேட்டை மூன்று மாத காலத்தில் சீர்செய்யும்படி தவணை கொடுத்து இருந்தார்கள்.

அதனை உணவகத்தின் உரிமையாளர் கவனத்தில்கொள்ளாத நிலையில்,  சுகாதாரத் திணைக்களத்தினர் இதனை நீதிமன்றத்தின் கவனத்திற்;கு கொண்டு வந்தார்கள்.

இந்நிலையில் நிதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பதினான்கு நாட்கள் அவகாசத்திலும் உணவக உரிமையாளர் சுகாதார நடவடிக்கையை மேற்கொள்ளாத நிலையில் உணவகத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை சீல்வைக்கப்பட்டுள்ளது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .