2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

வட மாகாண தேர்தலை புறக்கணிக்கக் கூடாது: டியூ

Super User   / 2013 ஜூலை 07 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, நா.நவரத்தினராசா

வட மாகாண சபை தேர்தல் தமிழர்களுக்கு நல்ல சந்தர்ப்பம். அதை தமிழர்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சிரேஷ்ட அமைச்சர் டி.யூ.குணசேகர தெரிவித்தார்.

கம்னியூஸ்ட் கட்சியின் 70ஆவது ஆண்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"35 வருடங்களாக அடக்குமுறைகள், யுத்தங்கள் இடமபெற்று முடிந்துள்ளன. இந்த நிலையில் தமிழ் மக்கள் இனவாதிகளும் அல்ல, சிங்கள மக்கள் இனவாதிகளுமல்ல. இரு சமூகத்திற்கு இடையில் இருக்கும் நடுத்தர வர்க்கத்தினரே இனவாத்தினை தூண்டுகின்றனர்.

அந்த இனவாத்தினை விட்டு, சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றுள்ள வட மாகாண சபை தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்காது ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த சந்தர்ப்பத்தினை சரியாக தமிழ் மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென்றும் அதனை புறக்கணிக்காது ஜனநாயக உரிமையினை வென்றெடுக்க வேண்டும்.

கடந்த 25 வருடங்களாக வாக்களிக்காத மக்களுக்கு தற்போது வாக்களிக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தினை சரியான முறையில் பயன்படுத்தி சரியானவர்களை தெரிவு செய்ய வேண்டும்.தேர்தலின் போது, சரியானவர்களை தெரிவு செய்யாது. பின்னர் வருத்தப்படாதீர்கள் என்றும் தகைமையில்லாதவர்களை தவிர்த்து தகமையானவர்களை தெரிவு செய்த ஜனநாயக உரிமையினை பாதுகாத்துக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார்.

அதேவேளை, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலை புறக்கணிக்க கூடாது என்றும், பல இனம் உள்ள இந்த நாட்டில், குறிப்பிட்ட சில இனத்தவர்களின் ஆதரவுடன், ஆட்சிக்கு வந்தவர்களினால், இனப்பிரச்சினையை தீர்த்து விட முடியாது. வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் மக்கள் ஆக்கபூர்வமாக ஏற்று உரிமையினை வென்றெடுக்க வேண்டும்" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .