2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

வலிகாமம் கல்வி வலயத்தில் மும்மொழிக் கொள்கை திட்டம்

Kogilavani   / 2013 ஜூலை 08 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளில் மும்மொழிக் கொள்கைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வலிகாமம் கல்வி வலய கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட நான்கு கல்விக் கோட்டங்களிலும் மும்மொழிக்கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என பிரதிக் கல்விப் பணிப்பாளர்களும்  முகாமைத்துவ உதவியாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

தெல்லிப்பளை கல்விக் கோட்டத்திறக்கான நிலையம், மல்லாகம் மகா வித்தியாலயத்திலும் சங்கானை கல்விக் கோட்டத்திற்கான நிலையம்  வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியிலும் உடுவில் கல்விக் கோட்டத்திற்கான நிலையம் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியிலும் சண்டிலிப்பாய் கோட்டத்திற்கான நிலையம் மானிப்பாய் மகளிர் கல்லூரியிலும் செயல்படத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையங்களின் ஊடாக மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்களுக்கு மும்மொழித்திட்டத்திற்கு அமைவாக பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .