2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

போரின் போது கைவிடப்பட்ட படகுகள் கையளிப்பு

Super User   / 2013 ஜூலை 08 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}



-சுமித்தி தங்கராசா


போரின் போது கைவிடப்பட்ட மீன்பிடி படகுகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் 55ஆவது படைப்பரிவின் கட்டைக்காடு பகுதியில் உள்ள மீன்பிடி குடும்பங்களின் படகுகளே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன.

கைவிடப்பட்ட மீன்பிடி படகுகளின் விபரங்கள் பாதுகாப்பு அமைச்சினால் திரட்டப்பட்டதுடன் ஏற்கனவே இருந்த விபரங்களின் உதவியுடன் உரிமையாளர்கள் இனங்காணப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள 14 மீன்பிடி குடும்பங்களுக்ளே இந்த படகுகள் கையளிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில், 55ஆவது படைப்பிரிவின் பிரிகேடியர் அஜித் விஜேதுங்க, கிராம அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .