2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

விபத்தில் முதியவர் மரணம்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 09 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா,சுமித்தி தங்கராசா

யாழ். மல்லாகம் மகா வித்தியாலயத்திற்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவரொருவர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார். 

மல்லாகம் பழம் பிள்ளையார் கோவிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுவிட்டு  சைக்கிளில் வந்துகொண்டிருந்தபோதே இவர் விபத்திற்குள்ளாகியுள்ளார்.

மல்லாகம் வீதியைச் சேர்ந்த தில்லையம்பலம் இராசலிங்கம் (வயது 68) என்பவரே இவ்விபத்தில் மரணமடைந்துள்ளார். 

வேகமாக வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் இம்முதியவரின் சைக்கிளும் மோதி விபத்திற்குள்ளானதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.    

இவ்விபத்தைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .