2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

முகாமை நோக்கு நூல் வெளியீடு

Kogilavani   / 2013 ஜூலை 10 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கு.சுரேன்


யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட இறுதி வருட மாணவர்களினால் வருடா வருடம் வெளியிடப்பட்டு வரும் 'முகாமை நோக்கு' என்ற சஞ்சிகையின் 15 ஆவது வெளியீடு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 2 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.

முகாமைத்துவ பீட தலைவர் எஸ்.தன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

15 ஆவது முகாமைத்து நோக்கு வெளியீட்டினை பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் வணிக முகாமைத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் ரி.வேல்நம்பி ஆகியோர் இணைந்து வெளியிட்டு வைத்தனர்.

1999 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வரும் முகாமை நோக்கு வருடாந்த சஞ்சிகையானது, இவ்வருடம் 30 ஆக்கங்களைத் தாங்கிவாறு வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாண்டுக்கான இதழாசிரியர்களாக எஸ்.கோடீஸ்வரன் மற்றும் கே.தேவராதா ஆகியோர் கடமையாற்றினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .