2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

காலாவதியான பொருட்கள் விற்பனை செய்தவர்களுக்கு அபராதம்

Kogilavani   / 2013 ஜூலை 10 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

காலாவதியான பொருட்களை விற்பனை செய்த 15 வர்த்தகர்களுக்கு 1 லட்சத்து 36 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பாவணையாளர் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி நவரட்ணம் சிவசீலன் தெரிவித்தார்.

யாழ். மற்றும் சாவகச்சேரி நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் பாவணையாளர்கள்
அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, 18 வர்த்தகர்களுக்கு எதிராக  வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதில், இவ் வழக்கிற்கு சமூகமளிக்காத 3 வர்த்தகர்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதடன், ஏனைய 13 வர்த்தகர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் 1 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாவும்  மற்றைய இரு வர்த்தகர்களில் ஒருவருக்கு ஆயிரம் ரூபாவும்  மற்றவருக்கு 5 ஆயிரம் ரூபா படியும் மொத்தமாக 1 லட்சத்து 36 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக பாவணையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .