2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

தேசிய மட்டத்தில் முதலாமிடம் பெற்ற மாணவர்களுக்கு வரவேற்பு

Kogilavani   / 2013 ஜூலை 11 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


நா.நவரத்தினராசா


கல்வி அமைச்சினால் தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட தமிழ் தின போட்டியில் நாடக பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று வெற்றிபெற்ற சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

கொழும்பில் இருந்து நேற்று காலை திரும்பிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்  சுன்னாகம் நாகம்ஸ் தியேட்டர் முன்றலில் இருந்து கல்லூரியின் மேழைத்தேய பாண்ட் வாத்தியக் குழவினரின் அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

இவ் வரவேற்பு ஊர்வலமானது, காங்கேசன்துறை வீதி, டொக்டர் சுப்ரமணியம் வீதி வழியாக சென்று பாடசாலையை அடைந்தது.

இதனைத் தொடர்ந்து பாரட்டு நிகழ்வு இடம்பெற்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .