2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

யாழில் சோதனைச் சாவடிகளை அதிகரிக்க முடிவு

Kogilavani   / 2013 ஜூலை 12 , பி.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வடமாகாண சபை தேர்தலை முன்னிட்டு யாழில் பொலிஸ் சோதனை சாவடிகளை அதிகரிக்கவுள்ளதாக யாழ்.பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். ஜெவ்ரி இன்று தெரிவித்தார்.

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்ற வாரந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'வடமாகாண சபை தேர்தலில் யார், எந்த கட்சியில் போட்டியிடுகின்றார்கள் என்பது பற்றி எமக்கு பிரச்சினை இல்லை. யார் போட்டியிட்டாலும், தேர்தல் பிரசார காலங்களில் பொலிஸ் பாதுகாப்பு கட்சியினால் கோரப்பட்டால், நிச்சயமாக பாதுகாப்பு வழங்குவோம். 

அத்துடன், எதிர்வரும் காலங்களில், யாழ். மாவட்டத்தில் பொலிஸ் சோதனைச் சாவடிகளை அதிகரிக்கவுள்ளோம்' என்றும் அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .