2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

உரிமைகளில் தலையிடுபவர்களை மரத்தில் கட்டிவையுங்கள்: மேர்வின்

Kogilavani   / 2013 ஜூலை 14 , மு.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா


'மக்களின் உரிமையில் தலையிடுபவர்களை மரத்தில் கட்டிவையுங்கள். நான் அவர்களைக் பார்த்துகொள்கிறேன்' என மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

யாழ்.நாவந்துறைப் பகுதியில் சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதை தடைசெய்யவேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களின் உரிமையில் தலையிடுவதற்கு பௌத்த துறவிகளுக்கும் ஏனைய மதத் தலைவர்களுக்கும் அதிகாரம் கிடையாது.

நாட்டில் நடைபெற்ற யுத்தத்தினால் எம்மைவிட அதிகமான பாதிப்புகளை எதிர்கொண்டவர்கள் நீங்கள்.  யுத்தம் முடிந்து தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்டு மக்கள் அபிவிருத்தியின் பலனை அனுபவித்துகொண்டு இருக்கின்றார்கள்.  
இந்த அபிவிருத்தி இங்கு வாழும் மக்களுக்கே தவிர மாவை சேனாதிராசாவிற்கு அல்ல.

பல உயிர்களை காவுகொண்ட மாவை சேனாதிராஜா, இரா சம்பந்தன் போன்றோர்களை இல்லாது ஒழித்து மக்கள் இப்பிரதேசத்தின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யவேண்டும்.  

இதயம் இல்லாத வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ் மக்களுக்கு ஜாதி, மதத்தினை போதித்து மனிதர்களின் உயிர்களை காவுகொண்டார்.

அத்துடன், துரையப்பா முதல் நீலம் திருச்செல்வம் வரையானவர்களின் உயிர்களையும் பறித்தார்கள். அந்த சந்தர்ப்பத்தில்தான் இந்த நாட்டின் முப்படைகளும் தமிழ் மக்களின் உயிர்களை விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்டார்கள்.

யுத்தத்தினால், இழந்தவற்றினை மீண்டும் பெற்றுகொடுக்கும் நோக்கத்துடனேயே கல்வியிலும், செல்வத்திலும் இந்த பகுதி மக்களை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி பல்வேறு செற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்.

நான் களனிப் பிரதேசத்தைச் சேர்ந்தவன். இங்கு வாழும் மக்களுக்கு பணியாற்ற அதிகம் விருப்பம் கொண்டுள்ளேன். ஜனாதிபதி விரும்பினால் நான் யாழ்ப்பாணத்திற்கு வந்து மக்களுக்கு சேவையாற்ற தயாராக இருக்கின்றேன்.

இங்கு வாழும் 6000 முஸ்லிம் மக்களும் ஜனாதிபதியை நம்புங்கள். அவர் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தருவார்' என்று தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • AMBI. Sunday, 14 July 2013 04:33 PM

    அட்ரா அட்ரா நாக்கு முக்கா நாக்கு முக்கா... என்னை போல நீங்களும் செய்யுங்கள், மரத்தில் கட்டுங்கள், அடி வாங்குங்கள். இதெல்லாம் எங்களுக்கு தேவையும் இல்லை. நாங்கள் அரசியல்வாதி ஆகப்போவதும் இல்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .