2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

இலத்திரணியல் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை

Kogilavani   / 2013 ஜூலை 13 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

இலங்கையில் இலத்திரணியல் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்ககான ஆரம்பப் பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எஸ்.எம்.சரத்குமாரா தெரிவித்தார்.

ஆட்பதிவுத் திணைக்களத்தின நடமாடும் சேவைகள் மற்றும் விழப்புணர்வுக் கருத்தரங்கும் இலத்திரணியல் தேசிய அடையாள அட்டை எதிர்காலத்தில் வழங்குவது தொடர்பான கலந்துரையாடலும் நல்லூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

'இதுவரைகாலமும் ஆட்பதிவுத் திணைகளத்தினால் ஆட்பதிவு அடையாள அட்டையே வழங்கப்பட்டது. தேசிய அடையாள அட்டை என்பது எதிர்காலத்தில் வழங்கப்படவுள்ள இலத்திரணியல் அடையாள அட்டையாகும்.

கடந்தகால யுத்தம் காரணமாக வட பகுதியில் பலருக்கு ஆட்பதிவுத் திணைக்களத்தின் அடையாள அட்டைகளை பெறமுடியவில்லை.

இதனை வழங்க வேண்டியது ஆட்பதிவுத் திணைக்களத்தின் கட்டாய கடமையாகும். இதன் அடிப்படையிலேயே ஆட்பதிவுத் திணைக்களத்தின் முதலாவது பிராந்திய அலுவலகம் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆட்பதிவுத் திணைக்களத்தின் இரண்டாவது பிராந்திய அலுவலகம் விரைவில் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பில் அமையவுள்ளது.  

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .