2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

வெவ்வேறு விபத்துக்களில் மூவர் காயம்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 16 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்ற வெவ்வேறு விபத்துக்களில் மூவர் காயமடைந்துள்ளனர். 

தெல்லிப்பழை சந்தியில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த இவர் மீது முச்சக்கரவண்டியொன்று மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பன்னாலை, பருத்தியோலையைச் சேர்ந்த  பிரசன்னா சந்திரராணி (வயது 26) என்பவரே இவ்விபத்தில் காயமடைந்துள்ளார். 

இது இவ்வாறிருக்க நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஆசிரியரொருவரும் மாணவியொருவரும் காயமடைந்துள்ளனர்.  இவ்விரு விபத்துக்களும் சுன்னாகம் - காங்கேசன்துறை வீதி ஜெற்மோட்டடோர்ஸ் ஒழுங்கைக்கு அருகிலேயே இடம்பெற்றன. 

இந்நிலையில், முன்னால் சென்ற ஆசிரியரொருவரின்; மோட்டார் சைக்கிளை பின்னால் வந்த  மோட்டார் சைக்கிளொன்று மோதியதால் இவ் ஆசிரியர் கால் முறிந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்;.

விஞ்ஞானப் பாடநெநி ஆசிரியரான எஸ்சேதுநாதன் என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.

இதேவேளை, மற்றைய விபத்தில்  வீதியை கடக்க முற்பட்ட மாணவி மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதால் இம்மாணவி  படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

தனியார் வகுப்பு முடிவடைந்து சென்றபோதே இவ்விபத்து இடம்பெற்றது.

மல்லாகம் மகா வித்தியாலய உயர்தர வகுப்பு மாணவியான குலேந்திரா தர்சினி (வயது 17) என்பவரே படுகாயமடைந்தார்.

இவ்விபத்துக்கள் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .