2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

மாணவர்கள் கௌரவிப்பு

Menaka Mookandi   / 2013 ஜூலை 16 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


தேசிய ரீதியில் நடைபெற்ற தமிழ்தினப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இ;ன்று செவ்வாய்க்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதீதியாக வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி கலந்துகொண்டு மாணவர்களை கௌரவித்தார்.

இந்தப் போட்டியில் வடமாகாணத்தைச் சேர்ந்த 47 பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் வடமாகாணத்திற்கு 24 தங்கப்பதக்கம், 8 வெள்ளிப்பதக்கம்,4 வெண்கலப்பதங்கம்  அடங்கலாக வடமாகாணம் 36 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

இந்த கௌரவிப்பு நிகழ்வில் வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், மாகாணக் கல்விப் பணிப்பாளர் வ.செல்வராசா, மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் இராதாகிருஸ்ணன், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .