2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

த.தே.கூ.வின் வேட்பாளர்கள்; நாளை இறுதித் தீர்மானம்

Menaka Mookandi   / 2013 ஜூலை 17 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவுக்கான இறுதி முடிவு நாளை வியாழக்கிழமை எட்டப்படவுள்ளது.
 
வேட்பாளர் தெரிவுக்கான முதற்கட்ட கலந்துரையாடல் இன்று புதன்கிழமை, இலங்கை தமிழரசு கட்சியின் யாழ். மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்ற நிலையிலேயே நாளைய தினம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது.

நேற்றைய தினக் கலந்துரையாடல், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவஞானம் சிறிதரன், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கிடையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

தேர்தலில் த.தே.கூ வேட்பாளர்களாக சமூகப் பிரதிநிதிகளை நியமிப்பதா அல்லது கட்சி உறுப்பினர்களை நியமிப்பதா என்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இன்றைய கலந்துரையாடலில் உறுதியான முடிவுகள் எடுக்க முடியாத நிலையில், மீண்டும் நாளை வியாழக்கிழமை 3 மணிக்கு கலந்துரையாடப்படவுள்ளது.

இதன் பின்னரே, சமூகப் பிரதிநிதிகளா அல்லது கட்சி வேட்பாளரை நியமிப்பதா என்பது பற்றிய தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .