2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

பழவகைகளுக்கு வெளிநாடுகளில் சிறந்த சந்தை வாய்ப்பை எற்படுத்த நடவடிக்கை

Kogilavani   / 2013 ஜூலை 18 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்


'யாழ்.மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற பழவகைகளுக்கு வெளிநாடுகளில் சிறந்த சந்தை வாய்ப்பை எற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்' என்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஒஸ்திரியா நாட்டின் இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கான தூதுவர் உறுதியளித்துள்ளதாக யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட தூதுவர் நேற்று திங்கட்கிழமை 2.30 மணிக்கு மாவட்டச் செயலகத்தில் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார். இச்சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம்,

' யுத்தத்திற்குப் பிந்திய காலத்தில் யாழ்.மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி தொட்பாக அங்குள்ள நிலமைகள் குறித்து கேட்டறிந்துகொண்டார். யாழ்.மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற பழவகைகளை வெளிநாடுகளிற்கு ஏற்றுமதி செய்து சிறந்த சந்தைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளித்துள்ளார்.

அத்துடன் யாழ்.மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளைக் கவரக் கூடிய பல்வேறு இடங்கள் உள்ளது. இவற்றை விருத்தி செய்வதன் மூலம் யாழ்.மாவட்டத்தில் சுற்றுலா துறையை மேம்படுத்த முடியும். இதற்கான வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிக்கவேண்டும்  என்று அவர் கேட்டுக்கொண்டார்' என தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .