2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

வடமாகாண சபை தேர்தலை ஐரோப்பிய ஒன்றியம் கண்காணிக்காது

Kogilavani   / 2013 ஜூலை 19 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

வடமாகாண சபை தேர்தலை வரவேற்றுள்ள ஐரோப்பிய ஒன்றியம், தேசிய ரீதியிலான தேர்தலை மட்டுமே கண்காணிக்கும் என்றும் வடமாகாண சபை தேர்தலை கண்காணிக்காது என்றும் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலே தூதுக்குழுவின் தலைவர் ஜீன் லம்பட் தெரிவித்தார்.

கொழும்பு, சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடமாகாண சபைத்தேர்தல் நடத்துவதையிட்டு சந்தோஷமடைகின்றோம்.அங்கு நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பதே எங்களுடைய எதிர்ப்பார்ப்பாகும் என்றும் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம், தேசிய ரீதியிலான தேர்தல்களை மட்டுமே கண்காணிக்கும். எனினும், வடக்கு தேர்தலை கண்காணிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டால் அது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்று ஊடகவியலாளர்களுடனான சிநேக கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.

ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

எமது தூதுக்குழு வடக்கிற்கு மட்டுமன்றி முதன்முறையாக மலையகத்திற்கும் விஜயம் செய்தது. தேயிலை உற்பத்தி தொடர்பில் ஆராய்ந்தது. காலநிலை மாற்றம் தேயிலை உற்பத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

வடக்கை பொறுத்தவரையில் சிவில் கடமைகளில் படையினரின் ஈடுபாடு அதிகாரித்தே இருக்கின்றது. இது சாதாரண பொதுமக்களின் பொருளாதாரத்திலும் வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். சிவிலியன்களுக்கு தங்களுடைய வாழ்க்கை முக்கியமானதாகும்.

கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னெடுக்கப்படுகின்றன. இதனோடிந்த வேலைத்திட்டம் மற்றும் அரசியல் முன்னெடுப்புகள் முறையாக முன்னெடுக்கப்படல் வேண்டும் என்றும் அவரி வலியுறுத்தினார்.

முன்னைய காலங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில் தற்போதும் காணாமல் போதல்கள் தொடர்கின்றன 15 வயதுடைய ஒருவர் அண்மையில் காணமல் போனமை தொடர்பில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

புலிகள் காலத்தில் வாழ்ந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களுடைய குடும்ப அங்கத்தினர்களில் பலரை இழந்தே நின்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .