2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

இலகு கடன் அடிப்படையில் தையல் இயந்திரம் வழங்கல்

Kogilavani   / 2013 ஜூலை 26 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்


நல்லூர் பிரதேச செயலர் பிரிவின் கிராம மாதர் அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் உற்பத்திதிறன் மேம்பாட்டு அமைச்சின் தொழில் வழிகாட்டல் பிரிவினால் நடத்தப்பட்ட பயிற்சி நெறிகளைப் பூர்த்திசெய்வதவர்களுக்கு இலகு கடன் அடிப்படையில் தையல் இயந்திரங்கள் இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

யாழ்ப்பாணம் வண்ணார்ப்பண்ணை லோட்டஸ் வீதியில் உள்ள பாரதியார் சனசமூக நிலையத்தில் வைத்து இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நல்லூர் பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலர், சுன்னாகம் பிரதேச அபிவிருத்தி வங்கியின் முகாமையாளர், நல்லூர் பிரதேச செயலக திட்டப்பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இந்த உதவிகளை வழங்கி வைத்தனர்.

இந்த பயிற்சி நிலையத்தில் பயிற்சியைப் பெற்ற 15 பேருக்கு பிரதேச வங்கியின் ஊடாக இலகு கடன் அடிப்படையில் இந்த தையல் இயந்திரங்கள் வழங்க்கப்பட்டுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .