2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

மீனவர் பிரச்சினைகளை அரசியல் மயப்படுத்த வேண்டாம்: வடமாகாண கடற்றொழில் கூட்டமைப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 28 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


வடமாகாண மீனவர்களின் பிரச்சினைகளை அரசியல் மயப்படுத்த வேண்டாமென வடமாகாண கடற்றொழில் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

வடமாகாண கடற்றொழில் கூட்டமைப்பும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் இணைந்தே இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

வடமாகாண கடற்றொழில் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அங்கு அவர்கள் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மீனவர் குழு ஒன்று எதிர்வரும் ஓகஸ்ட்  மாதம் 01 ஆம் திகதி கொழும்பிற்கு வருகை தரவுள்ளதாகவும் அந்த குழுவினர் 7 நாட்கள் தங்கி வடமாகாணத்தில் யாழ். மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு சென்று மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக ஆராய்வுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வருகை தரவுள்ள குழுவினர் யார், யாரால் அனுப்பப்படுகின்றார்கள் என தெரியவில்லை. இதுவரையும் மீனவர்களின் பிரச்சினைக்காக குரல் கொடுத்த நாம், ஒதுக்கப்படுகின்றோம். வருகை தரும் குழுவினரால் மீனவர்களின் பிரச்சினைகள,; அரசியல் தலையீடுகள் இருக்கின்றனவா அல்லது மீனவ சமுதாயத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்படுமா என்பது பற்றி கேள்விக் குறியாக இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

மீனவர் பிரச்சினைகளை அரசியல் மயப்படுத்துவதற்கான முனைப்பு நடக்கின்றதாக என்பது பற்றி எமக்கு தெரியாமல் இருக்கின்றது. அந்தவகையில், மீனவர்களாகிய எம்மை அரசியல் முத்திரை குத்தி, அரசியல் மயப்படுத்துவதற்கும்  பலியாக்குவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்பதை அறுதியாகவும் இறுதியாகவும் கூறிக் கொள்கின்றோம்.

அதேவேளை, எமது இந்திய இழுவைப் படகின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்றால், இரு அரசாங்கங்களும் ஒன்றிணைந்து பேசி முடிவிற்கு வரவேண்டுமே தவிர மீனவர்களினால் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்பதனை  வடமாகாண கடற்றொழில் கூட்டமைப்பினரர் வலியுறுத்தியுள்ளனர்.

எங்களை பொறுத்தவரையில் இறுதியான முடிவு காணப்படுமாயின் இரு அரசாங்கங்களின் மூலமே தீர்;த்து வைக்கப்பட வேண்டுமென்பதை ஆணித்தரமாக கூறிக் கொள்கின்றோம். இந்த நிலையில், எமது மக்கள் சின்னாபின்னமாகி, எந்த தொழிலையம் செய்யமுடியாதுள்ளதுனர்.
இன்று இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னோடியாக இருப்பவர்கள் தமது அரசியல் செல்வாக்குகளை செலுத்துவதற்காகவும்  எமது மக்களை அரசியல் நோக்கத்திற்கு பழியாக்கம் பச்சோந்தி விலையாட்டுக்களை நிறுத்தி, இயல்பாகவே எமது மக்களின் மனங்களை வென்றெடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வதாக வடமாகாண கடற்றொழில் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.

அத்துடன், நாங்கள் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் அல்ல. எமது மக்களின் தொழில் ரீதியாக, வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் அவற்றிற்கான வழிகளை அரசாங்கத்திற்கு இடித்துரைப்பதுடன், எடுத்துரைப்போம்.

அவ்வாறான செயற்பாடுகளை தான் சிலர் இவர்கள் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் என எடுத்துரைக்கின்றார்களே தவிர நாங்கள் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள்  அல்ல. அரசியல் நடவடிக்கைகளை கைவிட்டு மீனவ சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு அரசாங்கம் வழி வகுக்க வேண்டும்.
அதேவேளை வடபகுதி, தென்பகுதி என இனவாதத்தினை தூண்டுகின்றார்கள். வடபகுதி கடற்பரப்பில், தென்பகுதி மீனவர்கள் தொழில் செய்யக்கூடாது என தென்பகுதி மீனவர்கள் கேட்கின்றார்கள். எமது கடற்பரப்பில், சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி தொழிலினை மேற்கொள்ளவதற்கு இடமளிக்க மாட்டோம் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எமது மீனவ மக்களின் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு முன்வைக்காவிடின் எதிர்காலத்தில் சாத்வீக போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் வடமாகாண கடற்றொழில் கூட்டமைப்பினர் சுட்டிக் காட்டினார்கள்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .