2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

முன்னாள் போராளிகள் 50 பேர் விண்ணப்பித்திருந்தனர்: சுசில்

Kogilavani   / 2013 ஜூலை 31 , பி.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத்


'நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட முன்னாள் போராளிகள் பலர் விண்ணப்பித்திருந்த போதும் நேர்முகத் தேர்வுக்கு சமூகம் தராததால் அவர்கள் வேட்பாளர்களாக இணைத்துக்கொள்ளப்படவில்லை' என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந் தெரிவித்தார்.

யாழ்.கிறீன் கிராஸ் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'இந்தத் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு 50 முன்னாள் போராளிகள் தங்கள் விருப்பத்தை தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு விண்ணப்பத்திருந்தவர்கள் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளாத காரணத்தால் அவர்கள் வேட்பாளர்களாக இணைத்துக்கொள்ளப்படவில்லை' என்றார்.

You May Also Like

  Comments - 0

  • jeyarajah Thursday, 01 August 2013 03:59 AM

    முன்பு உங்களிடம் தமிழ் ஈழம் கேட்டவர்கள் இப்பொழுது என்ன கேட்கின்றார்கள் என்பதையும் கொஞ்சம் சேர்த்துச் சொல்லுங்களேன்.
    சிறையில் இருந்துகொண்டே அவர்கள் உங்கள் கட்சியில் அங்கத்துவம்.
    அங்கிருந்து கொண்டே பல பரிமாணங்களில் பரிமாற்றங்கள். சீமான்கள் பலரை சீரழித்து தாம் சீராகிவிட்டார்கள். இல்லை இல்லை கோட்டபாய சீராக்கி விட்டார். இலங்கை சிங்கப்பூராகிறதோ இல்லை யாழ். ஜப்பான் ஆகிறதோ இல்லையோ எனக்குத் தெரியாது. ஆனால் பல தமிழ் தலைவர்கள் கடாபி ஆவார்கள் என்பது எனக்கு உறுதியாகத் தெரிகிறது...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .