2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

வடமாகாண சபை தேர்தலில் களமிறங்கும் புதிய பெண்கள் அமைப்பு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக பெண்களை தனித்துவதமாக கொண்ட புதிய பெண்கள் அமைப்பு ஒன்று இன்று வியாழக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது..

பாதிக்கப்பட்ட பெண்களை தலைமைத்துவமாக கொண்டு அமைக்கப்பட்ட இப் புதிய பெண்கள் அமைப்பின் முதன்மை வேட்பாளராக இருதயராணி தம்பிப்பிள்ளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் தேர்தல் ஆணையாளரிடம் வேட்பு மனுக்களை கையளித்தனர்.

யாழ். மாவட்டத்தில் காணப்படும் 80 ஆயிரம் விதவைகள் மற்றும் கணவனால் பாதிக்கப்பட்டவர்கள், ஏனையவர்களின் வாழ்க்கையினை மேம்படுத்தும் நோக்கில் இப் புதிய பெண்கள் அமைப்பு உருவாக்கப்பட்டு, சுயேட்சை குழுவாக போட்யிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக புதிய பெண்கள் அமைப்பின் முதன்மை வேட்பாளர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .