2025 ஜூன் 21, சனிக்கிழமை

வடமாகாண சபைத் தேர்தலில் களமிறங்கும் பல்கலைக்கழக மாணவி

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 02 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்
 
நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் யாழ். மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
 
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் அரசியல் கட்சியான ஜனநாயக ஐக்கிய முன்னணியின் சார்பில் இவர் போட்டியிடுவதற்கு நேற்று வியாழக்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
 
கிழக்குப் பல்கலைக்கழத்தில் கல்வி கற்று வரும் புங்குடுதீவைச் சேர்ந்த கந்தசாமி விதுஜா என்பரே இவ்வாறு போட்டியிடவுள்ளதாக அக் கட்சியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் சகாதேவன்  தெரிவித்துள்ளார்.
 
யுத்தகாலத்தில் பல பாதிப்புக்களை எதிர்கொண்ட போதும் வடக்கு தேர்தலில் களமிறங்கும் இளம் பெண் வேட்பாளராக இவர் திகழ்கின்றார்.
 
பல அரசியல் கட்சிகள் தங்கள் அரசியல் நடவடிக்கைகளுக்கு பல்கலைக்கழக மாணவர்களைப் பயன்படுத்திய போதும் அவர்களுக்கு இந்த தேர்தலில் வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை. நாங்கள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டும் என்ற நோக்கில் இந்த தேர்தலில் குறித்த மாணவியை நிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • ruthra Monday, 05 August 2013 04:28 AM

    ஒரு இளம் பெண்ணாக தேர்தலில் போட்டியிட வந்த உங்களது தைரியத்தை வரவேற்க வேண்டும். உங்கள் ஆரம்பப் பயணம் வெற்றியடைய வாழ்த்துகிறோம்.

    Reply : 0       0

    parani Tuesday, 06 August 2013 12:10 PM

    பெண்களாலும் முடியும் என்பதை தேர்தலில் வெற்றிபெற்ற பெண் நிரூபித்து காட்டுங்கள். உங்களது வெற்றியின் பின்னான உழைப்பு ஏனைய பெண்களுக்கும் முன்னுதாரணமாக அமையட்டும். வாழ்க வளமுடன்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .