2025 ஜூன் 21, சனிக்கிழமை

பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகள் - ஐ.தே.க வேட்பாளர்கள் சந்திப்பு

Super User   / 2013 ஓகஸ்ட் 05 , மு.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா


யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகள் இன்று ஞாயிற்றிக்கிழமை வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

யாழ். ஞானம்ஸ் ஹோட்டேலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த சந்திப்பில் பொதுநலவாய நாடுகளின் ஜனநாயக விடயங்களுக்கான தலைமை ஆலோசகர் மார்சின் ஜெசி மற்றும் ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான செயலாளர் அன்னா ஜெயற்றி ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பில் நடைபெறவுள்ள தேர்தலில் கட்சிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், இராணுவ பிரசன்னம் மற்றும் வேட்பாளர்கள் அச்சுறுத்தப்படுதல் போன்ற பல்வேறு விடயங்கள்  குறித்து இந்த அமைப்பின் பிரதிநிதிகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர்கள் விளக்கமளித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .