2025 ஜூன் 21, சனிக்கிழமை

கிராம அதிகாரியின் வீட்டின் மீது கல் வீச்சு தாக்குதல்

Super User   / 2013 ஓகஸ்ட் 07 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

கொக்குவில் பகுதி கிராம அதிகாரியின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்களினால் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கிராம அதிகாரி யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

கொக்குவில் மேற்கு ஜே/104 கிராம அதிகாரியின் வீட்டின் மீதே நேற்று செவ்வாய்க்கிழமை இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிராம அதிகாரிமுறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

இதன்போது, சுமார் 75,000 ரூபா பெறுமதியான பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட யாழ.; பொலிஸார் தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .