2025 ஜூன் 21, சனிக்கிழமை

சர்வதேச அழுத்தங்களே தேர்தலை நடத்துவற்கு காரணம்: சித்தார்த்தன்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 07 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இந்தத் தேர்தலை சாதாரண ஒரு மாகாணசபைத் தேர்தலாக நாங்கள் பார்க்க முடியாது. இந்தத் தேர்தல் நடைபெறுவதற்கு சர்வதேசத்தின் அழுத்தங்கள்தான் காரணமாக இருந்திருக்கின்றது' தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை வேட்பாளரும் புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

'சர்வதேச நாடுகள் அனைத்துமே மிகப் பெரிய அழுத்தத்தை இலங்கை அரசுமீது கொடுத்திருந்தது. அதனால்தான் இந்த மாகாணசபைத் தேர்தல் வருகின்றது. இந்தத் தேர்தலின் பெறுபேறுகளை எங்களுடைய விடயத்திலே அக்கறையுள்ள உலக நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. ஆகவே தமிழ்மக்கள் ஒரு சரியான பதிலை, ஒரு உறுதியான செய்தியை இந்தத் தேர்தல் மூலம் கொடுக்க வேண்டும்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு மக்கள் அக்கறையெடுத்து செல்வார்களா? என்ற கேள்வியெழுகிறது. ஏனென்றால் கடந்தகால தேர்தல்களைப் பார்க்கின்றபோது மக்கள் தேர்தல்களிலே ஆர்வம் காட்டுவது குறைவு. இப்போதுகூட மக்கள் மத்தியில் அந்த ஆர்வம் நிச்சயமாக இல்லை. எனவே அந்த ரீதியிலே நாங்கள் மக்களை ஊக்குவிக்க வேண்டும்.

மக்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தினை எடுத்துக்கூறி அவர்களை வாக்குச் சாவடிகளுக்குக் கொண்டு செல்வதும், அவர்களை வாக்களிக்கச் செய்வதும்தான் தொண்டர்கள் மற்றும் கட்சிகளைச் சார்ந்தவர்களின் முதலாவது கடமையாக இருக்கவேண்டும்.

வாக்களிப்பதன் மூலம்தான் தமிழ்மக்கள் இன்றும் தங்களுடைய உரிமையை வேண்டி நிற்கின்றார்கள் என்கிற ஒரு செய்தியை கொடுக்க முடியும்.

இன்று எங்களுக்கிருக்கின்ற ஒரேயொரு பலம் இந்த வாக்கு. இந்த வாக்கின்மூலம் ஒரு நியாயமான செய்தியினை உலகத்திற்கு சொல்லி எங்களுடைய பிரச்சினையிலே அக்கறை காட்டுகின்ற நாடுகளின் அழுத்தத்தின்மூலம் ஒரு நியாயமான தீர்வினைக் கொண்டுவர முடியும்' என நாங்கள் நம்புகின்றோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • Sumathy m Wednesday, 07 August 2013 01:32 PM

    சித்தார்த்தண்ண... சித்தார்த்தண்ண... ஆருக்கண்ண விடுகிறீங்கள் ரீல்? நீங்கள் தவங்கிடந்து முன்னால, பின்னால அலை... அலை என அலைஞ்சு கூட்டமைப்பில ஒரு மாதிரி சேர்ந்ததும் வெளி நாட்டு அழுத்தமோ... அல்லது பதவி ஆசையால வந்த உள்நாட்டு அழுத்தமோ? தேர்தல் வைக்கிறது வெளிநாட்டு அழுத்தமெண்டால்... இராணுவம் இருக்கிறதும் காணிகளை பிடிக்கிறதும் வெளிநாட்டு அழுத்தம் தானோ? உங்கட அப்பா தர்மரின் பெயரை கெடுக்காதயுங்கோ அண்ண...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .