2025 ஜூன் 21, சனிக்கிழமை

பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதியே தேர்தலில் போட்டியிடுகின்றேன்: ஆர்.ஜெயசேகரம்

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 07 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


போரால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் வர்த்தகர்களின் நலன் கருதியே வடமாகாண சபை தேர்தலில் போட்டியிட தீர்மானித்ததாக வணிகர் கழக தலைவரும், மாகாண சபை வேட்பாளருமான ஆர்.ஜெய்சேகரம்  தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'வணிகர் கழகத்தின் தலைவர் என்ற ரீதியிலும், மக்களுக்கு செய்த பல நன்மைகளின் அடிப்படையிலும்; தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக என்னை அழைத்திருந்தார்கள்.

அந்த நிலையில், வணிகர் கழக உறுப்பினர்களுடன் கலந்துரையாடி மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் போட்டியிடுவதற்கு தீர்;மானித்துள்ளேன்.

போரால் பாதிக்கப்பட்டவர்கள், விதவைகள், வர்த்தகர்களின் நலனை மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தினை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்வதற்கு கைத்தொழில்துறை பாரிய பங்களிப்பு செய்கின்றது. யுத்தத்தின்போது, கைத்தொழில்துறை அழிவடைந்த நிலையில், கைத்தொழில் துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும்' என்றார்.

இதேவேளை, மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுவரும் நிலையில், தனக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.

வேட்பாளர் தெரிவு இடம்பெற்ற வேளையில், தனது உறவினர் ஒருவரிடம் சென்று தனது விபரங்ககளை திரட்டியதாகவும் அவர் இதன்போது சுட்டிக் காட்டினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .