2025 ஜூன் 21, சனிக்கிழமை

குப்பிளான் மக்கள் ஆர்ப்பாட்டம்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

குப்பிளான் வடக்கில் மீளக்குடியேறிய மக்கள் உடுவில் பிரதேச செயலகத்தின் முன்பாக இன்று பகல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம அலுவலர் அலுவலகம் வேண்டாம் மின்சாரம் வேண்டும், வீடு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே அவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

இதனையடுத்து பிரதேச செயலாளர் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் தற்போதைய நிலமையை எடுத்துக்கூறினர்.

உங்களுடைய பெயர்களும் வீட்டுத்திடட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன என்றும் தகுதியானவர்களுக்கு மூன்றாம் கட்டத்தில் வீடுகள் வழங்கப்படும் என்று கோரினர் இதனையடுத்தே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தனை கைவிட்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .