2025 ஜூன் 21, சனிக்கிழமை

வியட்னாம் தூதுவர்; ஆளுனருடன் சந்தித்துப்பேச்சு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா
 
யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் தொன் சிங்ஹா தங்ஹா வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ சந்திரசிறியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழில் உள்ள ஆளுனரின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

வடமாகாணத்தின்  யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் மக்களின் வாழ்வதார மேம்பாடு தொடர்பாக தூதுவர் ஆளுனரிடம் கேட்டறிந்துகொண்டார்.

கடந்த நான்கு வருட காலத்தில் வடக்கில் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்திப்பணிகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஆளுனர் விளக்கமளித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் பின்னர் வியட்னாம் தூதுவருக்கு ஆளுனரால் நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் வடமாகாண ஆளுனரின் செயலாளர் இளங்கோவனும் கலந்துகொண்டார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .