2025 ஜூன் 21, சனிக்கிழமை

கடல்சார் தொழில்களை வளர்ச்சிக்கு உதவுவோம்: வியட்நாம் தூதுவர்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 10 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா,சுமித்தி தங்கராசா

வியட்நாம் நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடல் சார் தொழில்களை வளர்ச்சி அடையச்செய்யும் நடவடிக்கைகள் மேற்க் கொள்ளப்படவுள்ளதாக இலங்கைக்கான வியட்நாம் நாட்டின் தூதுவர் ரொன்சின்தான் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் வியட்நாம் நாட்டின் தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் அலுவலகர்களான என்.நிருபராஜ் மற்றும் எஸ்.சஜிவனும் கலந்துகொண்டார்கள்.

முதல் கட்டமாக யாழ்ப்பாணத்தில் வேலனை துறையூரிலும் கிளிநொச்சியில் கிரான்சி மற்றும் வலைப்பாட்டிலும் இந்த முன்னோடி செயல் திட்டம் மேற்க்கொள்ளப்படவுள்ளது.

ஏனைய நாடுகளுக்கு இத்தகைய தொழில்நுட்ப அறிவை வழங்குவதாக இருந்தால் பல லட்சக் கணக்கான ரூபாய்க்கள் செலவு செய்யப்பட்டே இத்தகைய தொழில்நுட்பத்தைப் பெற முடியும்.

இலங்கைக்கு இந்த தொழில் நுட்பமானது இலவசமான முறையில் வழங்கப்படுகின்றது. இலங்கை நாட்டின் ஜனாதிபதியும் வியட்நாம் நாட்டின் ஜனாதிபதியும் செய்து கொண்ட ஒப்பந்தத்திறக்க அமைவாக இதனை மேற்க்கொள்கின்றோம்.

இந்த திட்டத்தின் கீழ் கடல்பாசி வளர்த்தல் சிங்க இறால் வளர்த்தல் மற்றும் கடலட்டை வளர்தல் அபிவிருத்தி செய்தல் போன்ற செயல்பாடுகள் மேற்க் கொள்ளப்படவுள்ளன.

இதனுடைய பயன் பயணாளிகள் என்பது எந்தளவுக்கு மக்கள் ஆர்வம் காட்டுகின்றார்களோ அந்தளவுக்கு பயணாளிகள் நன்மை அடையமுடியும். முதல் கட்டமாக வட மாகாணம் தெரிவு செய்யப்பட்டாலும் கூட இது ஒரு முடிய திட்டம் அல்ல. எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டிய பயனடைய வேண்டியதிட்டமாகும் எனவும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .