2025 ஜூன் 21, சனிக்கிழமை

பூம்புகாருக்கு புதிய மின் இணைப்பு

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 10 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா,எஸ்.கே.பிரசாத்


முழு நாடும் ஒளி பெறுகின்றது என்ற 'மகிந்த சிந்தனையின்' கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வடக்கின் வசந்தம் கிராமிய மின் வழங்கல் திட்டத்தின் அடிப்படையில் மீள்குடியேற்றம் இடம்பெற்ற அரியாலை பூம்புகார் கிராமத்திற்கான மின்சார வசதியினை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைத்தார்.

அரியாலை பூம்புகார் பகுதிக்கு நேற்று வெள்ளிக்கிழமை காலை விஜயம் செய்த அமைச்சர் கிராம மக்களிற்கான மின்சார விநியோகத்தை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வின் போது உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இத்திட்டம் ஆரம்பம் என்றும் மகிந்த சிந்தனையின் கீழான தேசிய வேலைத்திட்டத்தின் கீழான செயற்திட்டத்தில் ஏனைய அடிப்படை வசதிகளும் பெற்றுத்தரப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்நிகழ்வில், வடக்கின் வசந்தம் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் கோசல, யாழ். பிராந்திய மின் அத்தியட்சகர் ஞானகணேசன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச இணைப்பாளர் அம்பலம் ரவீந்திரதாசன் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .