2025 ஜூன் 21, சனிக்கிழமை

மீள்குடியேறிய மக்களிற்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்,
சுமித்தி தங்கராசா
 
வலிகாமம் வடக்கு சேந்தான்குளம் பிரதேசத்தில் மீள்குடியேறிய மக்களிற்கான மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
 
இன்று காலை 10.00 மணிக்கு கடற்தொழில், நீரியல் வளத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் சேந்தான்குளம் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கடற்தொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்தன மற்றும் பாராம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துகொண்டு கடற்தொழிலாளர்களிற்கான உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
 
கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் குறித்த பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு 11 மீன்பிடிப் படகுகளும் மற்றும் வெளியிணைப்பு இயந்திரம், வலைகள் என்பன வழங்கப்பட்டுள்ளன.
 
இந்த நிகழ்வில் கடற்தொழில் நீரீயல் வளத்திணைக்களத்தின் பணிப்பாளர் கெட்டியராட்சி, யாழ். மாவட்ட நீரியல்வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் கணேசமூர்த்தி, பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .