2025 ஜூன் 21, சனிக்கிழமை

மாதகலில் இறங்குதுறை அமைக்க கோரிக்கை

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். மாதகல் பகுதியில் புதிய மீன்பிடி இறங்குதுறை ஒன்று அமைப்பதற்கான கோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்னவிடம் மாதகல் பகுதி மீனவர்களும் கடற்படையினரும் நேற்று சனிக்கிழமை இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், மாதகல் பகுதியில் புதிய மீன்பிடி இறங்குதுறை அமைப்பது தொடர்பில் தான் கவனம் செலுத்துவதாகவும் இந்த வருட இறுதிக்குள்  புதிய இறங்குதுறை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பிலும் தான் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

இதேவேளை, மாதகல் பகுதியில் புதிய மீன்பிடி இறங்குதுறை அமைக்கப்படவுள்ள இடத்தை கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்னாவும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் நேற்று சனிக்கிழமை சென்று பார்வையிட்டனர்.

125 அடி அகலமும் 120 அடி நீளமும் கொண்டதாக 125 மில்லியன் ரூபா செலவில் இந்த இறங்குதுறை அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க, கடந்த 25 வருடங்களாக பாவனையின்றிக் காணப்பட்ட மாதகல், சவுக்கடி வீதியும் திறந்துவைக்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .